Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மன்மோகன் செய்த சிறப்பான சம்பவங்கள்..

இந்திய பொருளாதார மாற்றத்தின் கட்டமைப்பு நிபுணராக திகழ்ந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். கடந்தவாரத்தில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் அளித்த பங்களிப்பு ஏராளம். 1991-ல் இந்திய அரசின் பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்த போது, மன்மோகன்சிங், பல புதிய திட்டங்களை அறிவித்து பொருளாதார சரிவை மீட்டெடுத்தார். இறக்குமதி லைசன்ஸை நீக்கிய மன்மோகன் சிங், வரிகளை குறைத்து, ஏற்றுமதிக்கான மானியங்களை தூக்கி எரிந்தார். இதுதான் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய முக்கிய புள்ளியாக அமைந்தது. தாராளமயமாக்கல், தனியார் மயப்படுத்துததல், உள்ளிட்ட அம்சங்களால் கவனம் ஈர்த்த மன்மோகன் சிங், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் பெற்றதுடன், ஏற்றுமதியை அதிகரித்தார். பரஸ்பர நிதித்துறையை தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கி வைத்த மன்மோகன் சிங் , செபி இதற்கு ஒப்புதல் அளிக்க உதவினார். விவசாயத்துறையில் வேளாண் கடன்கள் 65ஆயிரம் கோடி ரூபாயை கடந்த 2009ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விவசாயிகளால் எளிதாக கடன் பெற முடிந்தது. தங்க நாற்கரை சாலைகள் திட்டம், ஐஐடிகளை அதிகரித்தது, மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கல்வி உரிமை சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், ஆதார் உள்ளிட்ட திட்டங்களை 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் கொண்டுவந்தார் மன்மோகன் சிங், திட்டங்கள் அதிகம் கொண்டுவந்தாலும், மன்மோகன் சிங்கின் அரசாங்கம் ஊழல் புகாரில் சிக்கியது. எனினும் அவர் மீது துளி கூட குற்றச்சாட்டுகள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *