Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
செய்தி

புதிய ஹெச்-1பி விசா விதிகள்


டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவின் திறமையான தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஹெச்-1பி (H-1B) விசாக்களுக்கான புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. முன்னதாக, குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி திறமை, அதிக ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்த புதிய முறை கூறுகிறது.


இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு 85,000 விசாக்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வரும்போது, அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகளை வழங்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இது அமெரிக்க ஊழியர்களிடையே நியாயமற்ற ஊதியப் போட்டி ஏற்படுவதைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார்.

ஹெச்-1பி விசாவில் புதிதாக வருபவர்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால், டெக் நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. முக்கிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்குமாறும், வெளிநாடுகளில் இருப்பவர்கள் செப்டம்பர் 21-க்குள் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கின.


ஆனால், வெள்ளை மாளிகை பின்னர் இந்தக் கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இது ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம் என்றும் தெளிவுபடுத்தியது.


2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, அமெரிக்க நிறுவனங்களே ஹெச்-1பி விசாக்களின் முக்கியப் பயனாளிகளாக உள்ளன.

அமேசான் (10,444), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (5,505), மைக்ரோசாப்ட் (5,189), மெட்டா (5,123), ஆப்பிள் (4,202), கூகிள் (4,181), ஜேபி மோர்கன் சேஸ் (2,440) ஆகியவை அதிக விசாக்களைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.


இந்த திடீர் அறிவிப்புகள் குறித்து, ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமான், சிஎன்பிசி-டிவி18 உடனான ஒரு நேர்காணலில், இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அதன் தாக்கம் குறித்து உடனடியாக தெரிந்துகொள்ள பல அவசர அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்தார்.


உலக அளவில் திறமையான ஊழியர்களை இடமாற்றம் செய்வதால் விசாக்கள் தங்கள் நிறுவனத்திற்கு முக்கியம் என அவர் கூறினார். அமெரிக்கா தொடர்ந்து ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருக்க வேண்டும் என்றும், எல்லைக் கட்டுப்பாடுகள் அவசியமானவை என்றாலும், நல்ல குடியேற்றக் கொள்கைகள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *