Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

2025 ஐபிஓவுக்கு தயாராகும் ஜியோ..

இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக திகழ்வது ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் அடுத்தாண்டு ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய அதன் உரிமையாளரான முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். ஐபிஓ வெளியிடுவது பற்றி கடந்த 2019 ஆம் ஆண்டுதான் முகேஷ் அம்பானி அறிவித்தார். ஆனால் அதன் பிறகு பேச்சு மூச்சே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள முதலீட்டாளர்களை அம்பானி இழுத்துள்ளார். இதில் கேகேஆர், ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்டவை முக்கியமான நிறுவனங்கள். ஜியோ நிறுவனத்தில் தற்போது வரை 47கோடியே 90 லடசம் சந்தாதாரர்கள் உள்ளனர். எனினும் நிர்வாகத்தில் உள்ள சவால்களை சரிசெய்வதே பெரிய பணியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடங்கினால், அவருடன் கைகோர்க்க முகேஷ் அம்பானி தயாராக இருக்கிறார். ஏற்கனவே கூகுள், மெட்டா, என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஜியோ கைகோர்த்துள்ளது. அண்மையில் ஹியூண்டாய் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு மதிப்பு 3.3 பில்லியனாக இருந்த நிலையில், ஜியோவின் மதிப்பு 112 பில்லியனாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜியோ ஒருபக்கம் வளர்ந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனமும் வேகமாக வளர்கிறது. உள்ளே உள்ள சிக்கல்களை தீர்த்துவிட்டுத்தான் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு செல்லும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் 12விழுக்காடு பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை வெளிநாட்டினருக்கு விற்கப்பட்டுள்ளன.ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் மட்டும் 7.44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளும் செய்யப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *