Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

என்ன!!! 1.29 லட்சம் கோடி கடன் தள்ளுபடியா????

நாட்டின் 4-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது கனரா வங்கி.இந்த வங்கியில் கடந்த 11 ஆண்டுகளாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அளவும்(1.29 லட்சம் கோடி ரூபாய்),பட்டியலும் மிகப்பெரியதாக உள்ளது.

இந்த வங்கியில் 100கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை கடனாக வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாத நபர்களின் பட்டியல் தேவை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்ப ஆர்வலர்கள் முற்பட்டனர். அதற்கு பதிலளிக்க முடியாது என்று கனரா வங்கி தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது.

ஆர்டிஐ சட்டத்தின்படி தகவல்அளிக்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் அதனைப்பற்றியெல்லாம் கனரா வங்கி கண்டுகொள்வதாக இல்லை.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகையை வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்த முடியாதோர் பட்டியலை நாளிதழ்களில் வெளியிடும் இதே வங்கி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடாமல் உள்ளது வியப்பளிப்பதாக புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் விவேக் வேலான்கர் என்பவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் கனரா வங்கி அளித்த கடனில் 19 %கடனை மட்டுமே வசூலித்துள்ளதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *