சிட்டி யூனியன் வங்கியின் MD & CEOஆக விஜய் ஆனந்த் நியமனம்
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராக (ED) இருக்கும் ஆர். விஜய் ஆனந்தை அதன் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க, ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளதாக சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 9, 2026 தேதியிட்ட கடிதத்தின் மூலம், மே 1, 2026 முதல் ஊதியத்துடன் கூடிய 3 ஆண்டுகளுக்கு ஆர். விஜய் ஆனந்தை வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிப்பதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது என்று சிட்டி யூனியன் வங்கி ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் வங்கியின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
சிட்டி யூனியன் வங்கிக்கு, ரிசர்வ் வங்கி அளித்த ஒப்புதல் கடிதத்தில், சலுகைகள் உட்பட ஆண்டுக்கு ₹2.50 கோடி நிலையான ஊதியமாக, ஆர்.விஜய் ஆனந்தின் ஊதியம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி சேவைகள், இடர் மேலாண்மை, போர்ட்ஃபோலியோ பகுப்பாய்வு, கடன் மதிப்பீடுகள் மற்றும் பிற சில்லறை வங்கிப் பிரிவுகளில், விஜய் ஆனந்த் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். சிட்டி யூனியன் வங்கியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் RBL வங்கியில் சில்லறை சொத்து பிரிவுக்க்கான வணிக மற்றும் வசூல் தலைவராக பணியாற்றினார். அங்கு ED மற்றும் MD உடன் நெருக்கமாக பணியாற்றினார். அவர் முதலில் 2023 இல் CUB இல் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் 2024 இல் ED ஆக நியமிக்கப்பட்டார்.
என். காமகோடி மே 2011 முதல் CUB இன் MD & CEO ஆக பணியாற்றி வரும் நிலையில், அவரது பதவிக்காலம் ஏப்ரல் 30, 2026 அன்று முடிவடைகிறது.
