Latest:
எஸ்.கே.எஃப் நிறுவனத்திடம் இருந்து AI மாற்ற ஒப்பந்தம் பெற்ற டி.சி.எஸ்பாட்டா இந்தியா: லாபம் 95.2% சரிவுசைடஸ் லைஃப்சயின்சஸ் பங்கு திரும்பப் பெறும் திட்டம்- Details Decoded$1.5 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட்டை முன்னெடுக்கும் டிரம்ப்தங்க நகை விற்பனை சரியவில்லை எனக் கூறும் டைட்டன் நிறுவனம்ஈரான் போரினால் ஹெல்மெட் உற்பத்தி செலவு 20% அதிகரிப்புJSW உத்கல் ஸ்டீல், IWAIஇடம் இருந்து ஆர்டர் பெற்ற லார்சன் & டூப்ரோஎரிபொருள் விலை உயர்வினால் பண வீக்கம் 5%ஆக உயர வாய்ப்புE20 எரிபொருள்: எத்தனால் கலந்த பெட்ரோலினால் நுகர்வோருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்E20 Fuel: Ethanol Blended Petrol and the Collateral Damage to Indian Consumersஎஸ்.கே.எஃப் நிறுவனத்திடம் இருந்து AI மாற்ற ஒப்பந்தம் பெற்ற டி.சி.எஸ்பாட்டா இந்தியா: லாபம் 95.2% சரிவுசைடஸ் லைஃப்சயின்சஸ் பங்கு திரும்பப் பெறும் திட்டம்- Details Decoded$1.5 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட்டை முன்னெடுக்கும் டிரம்ப்தங்க நகை விற்பனை சரியவில்லை எனக் கூறும் டைட்டன் நிறுவனம்ஈரான் போரினால் ஹெல்மெட் உற்பத்தி செலவு 20% அதிகரிப்புJSW உத்கல் ஸ்டீல், IWAIஇடம் இருந்து ஆர்டர் பெற்ற லார்சன் & டூப்ரோஎரிபொருள் விலை உயர்வினால் பண வீக்கம் 5%ஆக உயர வாய்ப்புE20 எரிபொருள்: எத்தனால் கலந்த பெட்ரோலினால் நுகர்வோருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்E20 Fuel: Ethanol Blended Petrol and the Collateral Damage to Indian Consumers
Latest:
எஸ்.கே.எஃப் நிறுவனத்திடம் இருந்து AI மாற்ற ஒப்பந்தம் பெற்ற டி.சி.எஸ்பாட்டா இந்தியா: லாபம் 95.2% சரிவுசைடஸ் லைஃப்சயின்சஸ் பங்கு திரும்பப் பெறும் திட்டம்- Details Decoded$1.5 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட்டை முன்னெடுக்கும் டிரம்ப்தங்க நகை விற்பனை சரியவில்லை எனக் கூறும் டைட்டன் நிறுவனம்ஈரான் போரினால் ஹெல்மெட் உற்பத்தி செலவு 20% அதிகரிப்புJSW உத்கல் ஸ்டீல், IWAIஇடம் இருந்து ஆர்டர் பெற்ற லார்சன் & டூப்ரோஎரிபொருள் விலை உயர்வினால் பண வீக்கம் 5%ஆக உயர வாய்ப்புE20 எரிபொருள்: எத்தனால் கலந்த பெட்ரோலினால் நுகர்வோருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்E20 Fuel: Ethanol Blended Petrol and the Collateral Damage to Indian Consumersஎஸ்.கே.எஃப் நிறுவனத்திடம் இருந்து AI மாற்ற ஒப்பந்தம் பெற்ற டி.சி.எஸ்பாட்டா இந்தியா: லாபம் 95.2% சரிவுசைடஸ் லைஃப்சயின்சஸ் பங்கு திரும்பப் பெறும் திட்டம்- Details Decoded$1.5 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட்டை முன்னெடுக்கும் டிரம்ப்தங்க நகை விற்பனை சரியவில்லை எனக் கூறும் டைட்டன் நிறுவனம்ஈரான் போரினால் ஹெல்மெட் உற்பத்தி செலவு 20% அதிகரிப்புJSW உத்கல் ஸ்டீல், IWAIஇடம் இருந்து ஆர்டர் பெற்ற லார்சன் & டூப்ரோஎரிபொருள் விலை உயர்வினால் பண வீக்கம் 5%ஆக உயர வாய்ப்புE20 எரிபொருள்: எத்தனால் கலந்த பெட்ரோலினால் நுகர்வோருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்E20 Fuel: Ethanol Blended Petrol and the Collateral Damage to Indian Consumers
உள்நாட்டு செய்திகள்

TCS நிர்வாகிகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயில வலியுறுத்தல்

ஜூனியர் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, AI தீர்வுகளை தனிப்பட்ட முறையில் உருவாக்குமாறு TCS தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் மூத்த நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

”ஜூனியர் மட்டத்தில் உள்ள எங்கள் ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவர்களாகவும், தேர்சி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் காண்கிறோம். சீனியர் நிலைக்கு பதவி உயர்வு பெறுபவர்கள், ஜூனியர்களின் இந்த திறன்கள் பற்றி படிக்கிறார்கள், கேள்விப்படுகிறார்கள். ஆனால் போதுமான தீர்வுகளை உருவாக்கவில்லை,” என்று மும்பையில் உள்ள நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் நடந்த ஒரு உரையாடலின் போது கிருத்திவாசன் கூறினார்.

“எனவே நம்மைப் போன்ற மூத்த நிர்வாகத்தினர் அனைவரும், அந்த அறிவின் அடிப்படையில் ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அது எவ்வாறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது கேள்விகளைக் கேட்பது மட்டுமல்ல; நீங்கள் எவ்வாறு உருவாக்குகிறீர்கள், எவ்வளவு விரைவில் நீங்கள் அதை உருவாக்க முடியும், எப்போது நீங்கள் அதை உருவாக்குகிறீர்கள், அது செயல்படுவதை உறுதி செய்ய நாங்கள் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம்,” என்று மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு நடுத்தர மற்றும் மூத்த மட்டங்களில் சுமார் 12,200 நிர்வாகிகளை டி.சி.எஸ் பணி நீக்கம் செய்த பின், தற்போது அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 2024 நிலவரப்படி, டி.சி.எஸின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது சுமார் 451,160 ஊழியர்கள், 30 வயதுக்குட்பட்டவர்கள். இது FY22 ஐ விடக் குறைவாகும். அப்போது இந்தப் பிரிவில் உள்ள பணியாளர்களின் விகிதம் சுமார் 60% ஆக இருந்தது. இந்நிறுவனம் அதன் FY25 ஆண்டு அறிக்கையில் அதன் ஊழியர்களின் வயதுப் பிரிவை வெளியிடவில்லை.

ஏற்கனவே உள்ள வருவாயை வீணடிப்பதாக இருந்தாலும் கூட, ஊழியர்கள் AI-ஐப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறார்கள் என்று கிருத்திவாசன் மீண்டும் வலியுறுத்தினார்.

டிசம்பர் மாத நிலவரப்படி TCS ஆண்டுக்கு $180 கோடி AI வருவாய் ஈட்டியதாக அறிவித்தது. அதே சமயத்தில், இன்ஃபோசிஸ் மற்றும் HCLTech ஆகியவை அக்டோபர்-டிசம்பர் 2025 இல் முறையே AI தொடர்பான வருவாய் மற்றும் மேம்பட்ட AI வருவாய், $28 கோடி மற்றும் $14.6 கோடி என அறிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *