ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது – ஈரான் சபாநாயகர்
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீண்டும் திறக்காது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் புதன்கிழமையன்று தெரிவித்தார்; மேலும், இந்த முற்றுகையை அவர் “போர்நிறுத்தத்தின் அப்பட்டமான மீறல்” என்றும் வர்ணித்தார்.
“கடற்படை முற்றுகையின் மூலம் போர் நிறுத்தம் மீறப்படாமல் இருந்தால் தான், ஒரு முழுமையான போர் நிறுத்தத்திற்கு அர்த்தம் இருக்கும். போர் நிறுத்தம் அப்பட்டமாக மீறப்பட்டு வரும் இச்சூழலில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமற்றது” என்று சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை 31 கப்பல்களை திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஈரான் இரண்டு கப்பல்களை சிறைபிடித்துள்ளது.இதன் விளைவாக தற்போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 103.49 டாலராக உயர்ந்துள்ளது.
