22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு..

கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவாக வசூலாகியுள்ளது. அந்த மாதத்தில் வசூலான ஜிஎஸ்டியின் அளவு 1.73லட்சம் கோடி ரூபாய் மட்டுமே, இது கடந்த ஆகஸ்ட்டை விட 1% குறைவாகும். செப்டம்பரில் நிகர உள்ளூர் வருவாய் 5.9%உயர்ந்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரீஃபன்ட்ஸ், போக மீதமுள்ள தொகை 4.5%அதிகம் என்றும் மத்திய மறைமுக வரிகள் அமைப்பான சிபிஐசி தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி ரீஃபன்ட்ஸ் தொடர்ந்து 2 ஆவது மாதமாக உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 24.3%ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 39.2% உயர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரீஃபண்ட் அளவு 38%ஆக இருந்தது. இந்தியாவின் 7 மாநிலங்களில் நெகட்டிவ் வருவாய் இருந்து வருகிறது. மணிப்பூரில் இருந்து வரவேண்டிய நிதி 33% சுருங்கியுள்ளது. குஜராத்தில் இருந்து பெரிய அளவில் ஜிஎஸ்டியும் வசூலாகவில்லை. தேசிய அளவைவிட குறைவாக தெலங்கானாவில் 1விழுக்காடு, ராஜஸ்தானில் 2, உத்தரபிரதேசத்தில் 3, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் தலா 5 %அளவுக்கு ஜிஎஸ்டி குறைவாக வசூலாகியுள்ளது. தேசிய சராசரி அளவு 6%ஆகும். சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள ஹரியானாவில் மட்டும் வருவாய் 24%உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் டெல்லியில் 20% வளர்ச்சி கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த மாதம் முதல் பண்டிகைகள் அதிகம் இருப்பதால் வரும் மாதங்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *