Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 230 புள்ளிகள் வரை சரிந்து 61 ஆயிரத்து 751 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்த சரிவு தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் பிரதிபலித்தது,65 புள்ளிகள் சரிந்த நிஃப்டி 18 ஆயிரத்து 344 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவிய இறங்குமுகம் தான் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெளிவான
விளக்கம் கிடைக்காததால் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் பிரதிபலிப்பாகவே இந்திய பங்குச்சந்தையிலும் பங்குகள் வீழ்ச்சியை கண்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக செயல்பட்டு பணத்தை மிச்சம்பிடிப்பதால் இந்தியாவில் முதலீடுகள் குறைந்துள்ளன. நிஃப்டியின் பொதுத்துறை வங்கிகள் குறியீடுதான் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தினசரி உபயோக பொருட்கள் துறையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை 0.9%, மருந்துத்துறை மற்றும் எண்ணெய் துறை பங்குகள் 0.39% மற்றும் பிற துறை பங்குகள் 0.15 முதல் 0.39% சரிவை சந்தித்துள்ளன டைட்டன்,டாடா மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்தித்தன. டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் நிறுவனம் 2% விலை ஏற்றம் கண்டுள்ளது. வார இறுதி நாள் வர்த்தக நாள் என்பதால் பங்குகளை அதிகம் விற்பதிலேயே முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *