Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்தியாவில் மொபைல் சாட்டிலைட் சேவை வர 2 வருஷமாகும்…

தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் தற்போது அமலில் இல்லை..தற்போது இந்த சேவை குறித்து அறிய வேண்டிய காரணம் யாதெனில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 14-ல் மொபைல் சாட்டிலைட் எனப்படும் செல்போனில் இருந்து செயற்கைக்கோளுடன் இணைக்கும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்த வசதி வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஐபோன் 14-ல் இந்த வசதி வந்திருந்தாலும் ஆண்டிராய்டு போன்களில் இந்த வசதியை உருவாக்கும் பணிகளை கூகுள் நிறுவனம் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற வசதியை பெற அதற்கென விதிகளை தனிநபர் பின்பற்ற வேண்டிய சூழல் உள்ளது. மேலும் நிறுவனங்களை பொறுத்தவரை இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற சேவைக்கு அனுமதி பெற ஏதுவாக விதிகளை கடந்தாண்டு மத்திய அரசு மாற்றி அமைத்தது. இதனால் எலான்மஸ்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற சேவையை அளிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும் இது உடனடியாக அமலுக்கு வராது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *