22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

1,300 கோடி கடன் பெற்ற கல்யாண் ஜூவல்லர்ஸின் பிரமோட்டர்..

பிரபல நகைக்கடை நிறுவனமாக வலம் வரும் கல்யாண் ஜூவல்லர்ஸின் பிரமோட்டராக இருப்பவர் டிஎஸ் கல்யாணராமன். இவர் 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை ஓக்டிரி நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். வார்பக் ஃபின்கஸ் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்க இந்த கடன் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ம் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கும் வகையில் இந்த கடன் பெறப்பட்டுள்ளது. 8.51கோடி பங்குகளை அடகுவைத்து ஓக் டிரீ நிறுவனத்திடம் இருந்து இந்த கடனை கல்யாண் ஜூவல்லர்ஸ் வாங்கியுள்ளது. வார்பக் பின்கஸ் என்ற நிறுவனத்தின் 2.36 %பங்குகளை 1300 கோடி ரூபாய் அளவுக்கு கல்யாணராமன் ஏற்கனவே கடந்த மாதம் வாங்கியிருந்தார். ஒரு பங்கின் விலை ரூ. 535 ஆக இருந்தது. கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 706.75 ரூபாய் என்ற அளவில் 32 % உயர்வை ஒரு மாதத்தில் அந்த நிறுவனம் கண்டுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தனது பங்கு மதிப்பை கிட்டத் தட்ட இருமடங்காக மாற்றியது முக்கிய அம்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *