Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பதஞ்சலியில் எல்ஐசி முதலீடு..

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்களை விற்று வரும் இந்த நிறுவனம், திறந்தவெளி சந்தையில் 2 விழுக்காடு வரை சமையல் எண்ணெயை விற்று வருகிறது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தைகளுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் பதஞ்சலி நிறுவனத்தின் 73 லட்சம் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளதாகவும். கடந்தாண்டு நவம்பர் 25 முதல் மார்ச் 4 ஆம் தேதிக்குள் இந்த வணிகம் நடந்ததாகவும் கூறியுள்ளது. ஏற்கனவே பதஞ்சலியில் 7 விழுக்காடு முதலீடுகளை வைத்துள்ள எல்ஐசி தற்போது அந்த அளவை 7.06%ஆக அதிகரித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் புரோமோட்டர்களிடம் 69.95% பங்குகள் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 13.3%, உள்ளூர் முதலீட்டாளர்களிடம் 6.3% முதலீடுகளை பெற்றுள்ளதுபதஞ்சலி நிறுவனம். மீதமுள்ள பங்குகள் 10.3% பொது பங்குதாரர்களிடம் உள்ளன. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 71% உயர்ந்து 371 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் செயல்பாட்டு வருவாய் 9,103 கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 57%அதிக லாபமாகும். கடந்த 2 ஆண்டுகளாக 923 ரூபாயாக இருந்த பங்குகளின் விலை தற்போது 1766 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஒரு பங்கின் அதிகபட்ச விலை ஆயிரத்து 992 ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *