22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பிளாக் ராக்குடன் மீண்டும் இணையும் அம்பானி..

உலகின் மிகப்பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனமான பிளாக் ராக் நிறுவனம் இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து தனிநபர் கடன் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனமும் பிளாக் ராக் நிறுவனமும் இணைந்து பல்வேறு நிதி சேவைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் தனிநபர் கடன்களுக்காக ஆசியாவிலேயே சிறப்பான இடமாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. பிளாக்ராக் நிறுவன அதிகாரிகள் மகேஷ் அம்பானியிடம் பேசியதாக கூறப்படும் நிலையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. உலகளவில் தனிநபர் கடன் சந்தை 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இந்த தேவை மேலும் உயர்ந்துள்ளது. ஜியோ பினான்சியல் நிறுவனத்தை கே.வி.காமத் நிர்வகித்து வருகிறார். அவர் வசமே வீட்டு அடமானக் கடன் மற்றும் பரஸ்பர நிதிமுதலீட்டு நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் மகேஸ்வர் நட்ராஜ் என்பவர்தான் தனிநபர் கடன் பிரிவு சார்ந்த வணிகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *