22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

நிறுவனங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் பணம் தரவேண்டும்!!!

ஓடிடி நிறுவனங்கள் வந்த பிறகு மக்களின் பொழுதுபோக்கு வேறு இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை ஓடிடி நிறுவனங்களுக்கு மட்டுமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். ஓடிடி நிறுவனங்கள் நெட்வொர்க் சேவை அளித்து வரும் நிறுவனங்களுக்கு பணம் ஏதும் அளிப்பதில்லை. இந்த சூழலில் ஓடிடி நிறுவனங்கள் நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுகு கட்டணமாக குறிப்பிட்ட தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்தியாவிலும் குறிப்பிட்ட தொகையை ஓடிடி நிறுவனங்கள் தரவேண்டும் என்று coai என்ற செலுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து ஓடிடி நிறுவனங்கள் இவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்று விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *