Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வங்கிகளில் வருகிறது புதிய வசதி..

வங்கிகளில் இணைய வழியில் பணம் அனுப்பும்போது மோசடிகள் மற்றும் பிழைகளை குறைக்கும் வகையில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் ஆகியவற்றில் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் பெயர் வெரிஃபை செய்யும் வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது வரை யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் ஆகிய வழி பரிவர்த்தனைகளில் பணத்தை பெறுவோரின் பெயர் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் ஆகியவற்றில் இந்த வசித இல்லை. இதனால் ஒரு எண் மாறினாலும் வேறொருவர் பெயருக்கு பணம் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுக்கும் நோக்கில் புதிய வசதி குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் உள்கட்டமைப்பாக மாற்றும் முயற்சியை ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் அவசியமாகும். பணம் சரியான நபருக்குத்தான் செல்கிறதா என்று வெரிஃபை செய்யும் வசதியை ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் வசதியில் உறுதி செய்ய வேண்டும் என்று அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. சைபர் மோசடிகள், தெரியாத நபருக்கு பணம் அனுப்புவதை தடுக்க இதனை எவ்வளவு முடியுமோ அத்தனை விரைவாக செய்ய வேண்டும் என்று நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியிருந்தார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மக்களுக்கு இந்த வசதியை அளிக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *