22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டாடா குழும தலைவர் எனக்கு இன்ஸ்பிரேஷன் – அம்பானி

பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கடந்த சில ஆண்டுகளாக டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரனின் முயற்சிகளால் டாடா குழுமம் அபார வளர்ச்சி அடைந்துள்ளதாக புகழாரம் சூட்டினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு சந்திர சேகரன் எடுத்துவரும் முயற்சிகள் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக
முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன், பல இளம் தலைமுறையினருக்கு
முன்மாதிரியாக திகழ்வதாகவும் அம்பானி கூறினார். டாடா பவர் நிறுவனம் 75ஆயிரம் கோடி ரூபாயை, ஆற்றல் துறைக்காக செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதுப்பிக்க ஆற்றல்துறையில் இந்தியா மிகமுக்கிய பங்கு வகிக்க பல முன்னோடி நிறுவனங்களே காரணம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் அண்மையில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தனது 50 ஆயிரமாவது மின்சார காரை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் புரட்சியை செய்வதில் டாடா குழுமத்தின் சந்திரசேகரனுக்கு வாழ்த்துகள் என்று முகேஷ் அம்பானி உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *