22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

42,000 பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!!!

அமெரிக்காவின் நியூஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காக்னிசண்ட் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனது நிறுவன பணியாளர்களுக்கு 42 ஆயிரம் பேருக்கு கடந்த நிதியாண்டில் சம்பள உயர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த நடவடிக்கையில் தனது ஊழியர்களுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பள உயர்வாக அளிக்கப்பட்டுள்ளது.
13 ஆயிரத்து 810 ஊழியர்களுக்கு சராசரியாக 14விழுக்காடு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பல்வேறு
நிலைகளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 34,216 ஊழியர்களுக்கு சராசரியாக 12 விழுக்காடு சம்பள உயர்வும் அளிக்கப்பட்டது. புதிய சம்பளம் இம்மாதத்தில் இருந்து கணக்கிட்டு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக சராசரியாக 10 விழுக்காடு சம்பள உயர்வு அந்நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மட்டும் அந்த நிறுவனம் கடந்தாண்டில் வருமானம் 33 ஆயிரத்து 979 கோடி ரூபாயாக உள்ளது.
அந்த நிறுவனம் தனது 3வது காலாண்டு முடிவுகளை அடுத்த மாதம் அறிவிக்க உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *