Latest:
டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புவிரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புவிரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்
Latest:
டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புவிரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புவிரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்
செய்தி

தொடருமா டிரம்ப் அடாவடி..?

நவம்பர் 1, 2025 முதல் சீனப் பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கவும், அனைத்து முக்கிய மென்பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட நீண்ட பதிவில், வர்த்தகத்தில் சீனா அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், உலக நாடுகளுக்கு விரோதமான கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் தயாரிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்கள் மீதும், பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க சீனா விரும்புவதாக அவர் கூறினார்.

இதற்கான அமெரிக்காவின் எதிர்வினை உடனடியாகவும் கடுமையாகவும் இருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

நவம்பர் 1, 2025 முதல் (அல்லது சீனா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்து, அதற்கு முன்னர்), அமெரிக்கா சீனா மீது 100 சதவீத வரியை விதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தற்போது செலுத்தும் இறக்குமதி வரிகளுக்கும் மேலாக இந்த கூடுதல் வரி விதிப்பு இருக்கும் என்றும் அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் சீனப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் சுமார் 130 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இரு நாடுகளும் வர்த்தகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த 145 சதவீத அளவை விட இது சற்று குறைவாகும்.

உலகளாவிய நிதிச் சந்தைகள் இந்த அறிவிப்புக்கு கடுமையாக எதிர்வினையாற்றின.

S&P 500 குறியீடு 2.7 சதவீதம் சரிந்தது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இது ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.

அதே நேரத்தில் Nasdaq100 சந்தை 3.5 சதவீதம் சரிந்தது. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.52 சதவீதம் சரிந்தது. அமெரிக்க விவசாயப் பொருட்களின் இறக்குமதியை சீனா மீண்டும் கட்டுப்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சோயாபீன் எதிர்கால விலை கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிந்தது.

இதை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு காரணங்களை கூறி, சீனாவின் வணிக அமைச்சகம், அரிய வகை உலோகங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மீதான புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்தது. அரிய வகை உலோகங்கள் கொண்ட பொருட்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் இனி சிறப்பு உரிமங்கள் பெற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *