செமக்ளூடைடு உற்பத்தி செய்ய நாட்கோ பார்மாவிற்கு அனுமதி
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நாட்கோ பார்மா, ஊசி மூலம் செலுத்தப்படும் பொது மருந்தான செமக்ளூடைடு மருந்தை இந்தியாவில் தயாரித்து சந்தைப்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (CDSCO) ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த தயாரிப்பை மார்ச் 2026 இல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம், பங்கு சந்தையில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் கூடுதலாக, சிகிச்சையளிப்பதற்காக செமக்ளூடைடு பரிந்துரைக்கப்படுகிறது.
டேனிஷ் மருந்து தயாரிப்பாளரான நோவோ நோர்டிஸ்க்கின் செமக்ளூடைடு மீதான காப்புரிமையை ரத்து செய்யக் கோரி நாட்கோ பார்மா முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமும் கடந்த ஆண்டு காப்புரிமைச் சட்டம் மற்றும் வணிக நீதிமன்றச் சட்டத்தின் விதிகளின் கீழ், நோவோ நோர்டிஸ்க்குக்கு வழங்கப்பட்ட இந்திய காப்புரிமை எண் IN 262697 ஐ ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தது.
நாட்கோ பார்மா லிமிடெட்டின் பங்குகள் வெள்ளி அன்று 2.13% குறைந்து ₹822 இல் முடிவடைந்தன. கடந்த ஒரு ஆண்டில் இந்த பங்கு 8% சரிந்துள்ளது.
