RBIயின் FCNR(B) ஸ்வாப் வசதியின் கீழ் ரூ. 34,000 கோடியைத் திரட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கி
செப்டம்பர் 3 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கியின் FCNR(B) ஸ்வாப் வசதியின் கீழ் IDFC ஃபர்ஸ்ட் வங்கி சுமார் ரூ. 33,975 கோடியை (357 கோடி டாலர்) திரட்டியுள்ளது; இது ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வைப்புத்தொகையில் 11 சதவீதமாகும்.
இக்காலகட்டத்தில் வங்கியின் IFSC வங்கிப் பிரிவு (IBU) ரூ. 24,720 கோடி (260 கோடி டாலர்) மதிப்பிலான கடன் வழங்கலை மேற்கொண்டதாகவும் வங்கி மேலும் தெரிவித்தது.
சிறப்புத் திட்டங்கள் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து இந்தியா சாதனை அளவாக 12,700 கோடி டாலரை ஈர்த்துள்ளது. இது எதிர்பார்ப்புகளை வெகுவாக மிஞ்சியதுடன், மதிப்பு சரிவைச் சந்தித்து வரும் ரூபாயைக் காப்பதற்கான வலுவான பாதுகாப்பையும் கொள்கை வகுப்பாளர்களுக்கு அளித்துள்ளது.
துபாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் போன்ற முக்கிய மையங்களில் வசிக்கும் 3.5 கோடி இந்தியர்களைச் சென்றடைவதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் உள்ளிட்ட வங்கிகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகள், இந்த நிதி வரத்து அதிகரிப்புக்கு உதவின.
‘Foreign Currency Non-Resident’ அல்லது FCNR (B) வைப்புத்தொகைகள் மூலம் திரட்டப்பட்ட தொகை 12,723 கோடி டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயக் கடன் மற்றும் வெளிநாட்டுக் வணிகக் கடன்கள் (ECB) மூலம் 9.15 பில்லியன் டாலர் வரத்து இருந்தது; இதனால் மொத்தத் தொகை 136.38 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது மத்திய வங்கியின் 80 பில்லியன் டாலர் மதிப்பீட்டை விட அதிகமாகும்.
