22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!

வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பிரபலமானதாகும்.இந்த நிறுவனம் இந்தியாவில் நிதிசேவை மற்றும் காப்பீட்டு சேவைகளை அளித்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் தங்கத்தில் முதலீடு செய்யும் வசதியும் இந்த செயலியில் அறிமுகமானது. தற்போது வெள்ளி விற்பனையிலும் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது.

இந்தியாவில் இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளரிகள் எண்ணிக்கை 40 கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.

இந்த நிறுவனம் இந்தியாவில் கிரெட்,கூகுள் பே, மொபி குவிக்,உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக பேமெண்ட் சேவை அளித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் கிக் இந்தியா நிறுவனத்தை போன்பே நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *